×

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி-பல லட்ச ரூபாய் தப்பியது

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அடுத்த புத்தேரி மெயின் ரோட்டில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்துக்குள் மர்ம நபர் புகுந்து, இயந்திரத்தின் முன் பகுதியை உடைத்துள்ளார். ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டதும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி மூலம் வங்கி தொடர்புடைய அதிகாரிகளின் செல்போன்களில் அபாய அலாரம் ஒலித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குமரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.பின்னர் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஏடிஎம் மையம் அமைந்துள்ள பகுதி, நாகர்கோவில் பாலமோர் ரோடு ஆகும். 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த சமயத்தில், ஆள் நடமாட்டம் இருந்ததால் பாதியிலேயே மர்ம நபர் தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த வருட தொடக்கத்திலும் கருங்கல், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி பகுதிகளில் ஏடிஎம் உடைப்பு சம்பவம் நடந்தது. ஆனால் பணம் எதுவும் கொள்ளை போக வில்லை. இதனால் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்த வில்லை. தற்போது மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசையை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post நாகர்கோவில் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி-பல லட்ச ரூபாய் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...